கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 75 ஆயிரத்துக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குணமடைபவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 3.5 மடங்கு அதிகரித்துள்ளது என சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா
தற்போது இந்தியாவிலும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. 24 மணி நேர நிலவரப்படி 75,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33.1 லட்சமாக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து 25,23,771 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதார துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனா அதிகமாக பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்த வரிசையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை அடக்கம். உலகளவில் இந்தியா கொரோனா தோற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது.
அதேபோல் நேற்று 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 6839 உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 3.5 மடங்கு அதிகரித்துள்ளது என சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.