தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு – மேலும் ஒரு உயிரிழப்பு..!

0

தமிழகத்தில் ஏற்கனவே 571 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இன்று மேலும் ஒரு பெண் கொரோனா வைரஸால் உயிர் இழந்துள்ளார்.

தமிழகத்தில் 621:

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 50ல் 48 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சியைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் உயிர் இழந்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் 91,851 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here