கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இந்நிலையில் மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 5,916 மேற்பட்டோர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 506 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளவர்கள். கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் 178 பேர்.
இந்தியாவில் மருத்துவர் பலி..!
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |