சீனா ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா – நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சி தகவல்..!

0

உலகையே உலுக்கி வரும் கொரோனா சீனாவில் உள்ள உஹானில் தொடங்கியது. அங்குள்ள இறைச்சி சந்தையில்தான் இந்த கொரோனா தோன்றியது என கூறிப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு வென்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னர் தெரிவித்துள்ளார்.

லூக் மோன்தக்னர்

இதை பற்றி லூக் மோன்தக்னர் டிவி பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, “வவ்வால் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து கொரோனா பரவியிருப்பதாக சீனா கூறியிருப்பது கட்டுக்கதை.

சீனாவில் மனிதர்களால் ...

இதற்கு சாத்தியமில்லை. வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வகத்தில், தற்செயலாக நடந்த விபத்தின் மூலம் கொரோனா பரவியிருக்கும். 2000ம் ஆண்டு துவக்கம் முதல் கொரோனா வைரஸ்களை சீனா ஆராய்ச்சி செய்து வருகிறது.” என கூறியுள்ளார்.

டொனால்டு டிரம்ப்

Coronavirus pandemic | Trump announces $19 bn relief for farmers ...

விலங்கு சந்தையிலிருந்து கொரோனா பரவியது என்ற சீனாவின் கூற்றை, அமெரிக்கா மறுத்துள்ளது. ‘உலகம் முழுதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள, ‘கொரோனா’ வைரசை, சீனா வேண்டு மென்றே பரப்பியிருந்தால், கடும் விளைவை சந்திக்க நேரிடும்’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தீவிர விசாரணையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here