கொரோனா தடுப்பூசி விரைவில் மக்களுக்கு செலுத்தப்படவேண்டும் இல்லையென்றால் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான வைரஸாக உருமாறிக்கொண்டே இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
உலகெங்கும் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. சில நாடுகளில் தடுப்பூசிக்கான முழுமையான பரிசோதனை முழுதாக முடியாத முன்னமே அந்த தடுப்பூசிகளை ஒப்புதல் அளித்து அவை அவசரகால தடுப்பூசியாக பயன்பாட்டில் இருக்கின்றன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் பயன்பாட்டிலிருக்கும் கொரோனா தடுப்பூசி தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸை விட குறைந்த செயல்திறனை கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் பிரேசிலில் பரவி வரும் வைரஸ் ஏற்கனவே தொற்று இருந்து குணமடைந்தவர்களுக்கும் எளிதாக பரவக்கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியால் ஆண்மை பாதிக்குமா?? வெளியாகும் அதிர்ச்சி தகவல்!!
தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் மீண்டுமாக உருமாறக்கூடும் என்பதால் விரைந்து அனைவரும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.