
கொரோனா நோய் பரவல் காலத்தில் ஒரு சில நாடுகளில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்தில் சுமார் 2.25 லட்சம் பேர் உயிரிழந்ததற்கான காரணத்தை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசு ஆலோசகர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தற்போதைய பிரிட்டன் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்,குறித்து திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது கொரோனா காலத்தில் நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனிடம், “நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால் முழு ஊரடங்கை பிறப்பிப்பதை விட சிலர் செத்து மதிய விட்டுவிடலாம்.” என கூறியதாக அரசு ஆலோசகர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் விசாரணை குழு கேள்வி எழுப்ப, ரிஷி சுனக் நேரடியாக பதிலளிப்பார் என தெரிவித்துள்ளனர். அதேபோல் கொரோனா காலத்தில் உணவகங்களுக்கு சென்று சாப்பிடுமாறு பொதுமக்களிடம் ரிஷி சுனக் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்களே கொஞ்சம் உஷார இருங்க.., நாளை இந்த பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்க போகுது – முக்கிய அறிவிப்பு!!