தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில முக்கிய பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும். மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், புதுக்கோட்டை , நாகப்பட்டினம், திருப்பூர் மற்றும் தென்காசி மலைப்பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இனி இத செஞ்சே ஆகணும்.., தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!