‘கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை’ – மத்திய அரசு தகவல்!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி சுமார் 18 மாநிலங்களில் கொரோனாவால் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து இந்திய முழுவதும் கொரோனா பரவல் கொடுரமாக பரவி வந்தது. இதனால் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு பற்றிய தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி உத்தர பிரதேச, ராஜஸ்தான் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 90 லட்சம் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இதுவரை 61,50,922 சுகாதார பணியாளர்களுக்கு ஒரு முறை தடுப்பூசியும் மேலும் 2,76,377 சுகாதார பணியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

நாளை ஐபிஎல் மினி ஏலம் – அணிகள் வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா??

இன்று மாலை 4 மணி வரை கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். அதுபோல் 36 பேரில் 22 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36 பேரில் 2 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 12 பேர் உயிர் இழந்துள்ளனர். பலியான 29 பேரில் மருத்துவமனைக்கு வெளியே 17 பேரும் மருத்துவமனையில் வைத்து 12 பேரும் பலியாகியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட விளைவுகளால் யாரும் உயிர் இழந்ததாக தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here