கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 23,285 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்போது இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
கடந்த ஆண்டு இறுதியில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் சில நாட்களாகவே கொரோனாவால் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,882 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,13,33,728 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 140 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கொரோனாவால் மொத்தம் 1,58,446 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கொரோனா பரவல் எதிரொலி – தடுப்பு நடவடிக்கைளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்!!
மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1,09,73,260 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,02,022 பேர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் குணமடைந்தவர்களின் விகிதம் 96.86% ஆகவும், உயிர் இழந்தவர்களின் விகிதம் 1.40% ஆகவும் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 1.74% ஆகவும் உள்ளது.