விஜய் டிவியில் இரண்டு புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக விஜய் தொலைக்காட்சி தொடரில் நடித்து அனைவரின் மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரம் கிருத்திகா இந்த தொடரில் நடிக்கவுள்ளார்.
புது தொடர்கள்
விஜய் டிவியில் இரண்டு புத்தம் புது தொடர்கள் பிரமாண்டமான முறையில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. முன்னதாக தொலைக்காட்சி தொடர்களின் மூலம் அதிக ரேட்டிங் வைத்திருக்கும் விஜய் டிவியில் இன்னும் இரண்டு தொடர்கள் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது. இந்த இரண்டு புதிய தொடர்களின் ப்ரோமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வித்தியாசமான கதைகளை கொண்ட இந்த இரு புதிய தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. ‘ராஜ பார்வை’ தொடரில் கண் தெரியாத நாயகனுக்கு, நாயகி மீது காதல் ஏற்படுகிறது. தடைகளை தாண்டி இருவரும் வாழ்க்கையில் இணைவார்களா என ஒளிபரப்பாகவுள்ளது ராஜ பார்வை தொடர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
மற்றொரு தொடரான ‘வேலம்மாள்’ முற்றிலும் மாறுபட்ட கதையுடன் பயணிக்க உள்ளது. இத்தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘மௌனராகம்’ தொடரில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் கிருத்திகா நடிக்க உள்ளார். அரச குடும்பத்தில் வீரமிக்க பெண்ணாக வளரும் வேலம்மாள், தன் அப்பாவால் வெறுக்கப்படுகிறார்.
வீரத்திற்கும் தந்தையின் பாசத்திற்கும் இடையே சிக்கித்தவிக்கும் வேலம்மாள், தந்தையின் பாசத்தை பெற்றுக்கொள்வாரா என இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த இரண்டு தொடர்களும் மக்களை கவரும் விதத்தில் பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது என்பது கூடுதல் தகவல்.