விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம், தனக்கான பிம்பத்தை மாற்றி இன்று பெரிய அளவில் பேசப்படும் ஷகீலா, தன் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து உருக்கத்துடன் பேசியுள்ளார்.
ஷகிலா கதறல் :
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷகிலா. இதன் பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு இவர் வந்ததிலிருந்து இவர் மீதான மொத்த பிம்பமும் மாறியது. ஷகிலா அம்மா என இவருக்கான இமேஜ் டோட்டலாக மாறிப்போனது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷகிலா, பத்தாம் வகுப்பில் நான் மூன்று பாடங்களில் பெயிலாகி விட்டேன். இதற்காக, ஒரு பெண் பிள்ளை என்று கூட பாராமல் நடுரோட்டில் போட்டு என் அப்பா என்னை அடித்தார்.
நீ எல்லாம் எங்க உருப்பட போற? என என்னை திட்டினார். அதன் பிறகு அப்படியே சினிமாவுக்கு வந்து விட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது தான் எனக்கான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.