உலக நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்து வருவதால் பல்வேறு கண்டுபிடிப்புகளை பல நாடுகளும் உருவாக்கி வருகின்றனர். இந்த கண்டுபிடிப்புகளில் அதிக அளவில் அணுகுண்டு போர் விமானம் போன்றவைதான் செயல்படுகிறது. ஏனென்றால் அடுத்த உலகப்போர் எந்நேரமும் நிகழக்கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் கடந்த 10 மாதங்களாக ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் அமைதி இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தினாலும் ரஷ்யா முடிவில் பின்வாங்குவதாக தெரியவில்லை. இதனால் போரில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
2023ம் ஆண்டு முதல் தொடர்., சொந்த மண்ணில் வென்ற இந்திய அணி!! 360 நாயகனுக்கு குவியும் பாராட்டு!!!
உக்ரைன் நாட்டிற்கு மட்டுமல்லாமல் அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். இவர் தற்போது புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பின் விளிம்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது என உக்ரைன் உளவுத் துறை மேஜர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார். மேலும் சமீபகாலமாக பொது நிகழ்வுகளில் கலந்து கொண்ட புடின் தோற்றங்கள் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.