2023 ஆம் ஆண்டுக்கான முதல் தொடராக இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கியது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 91 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த போட்டியில் ராகுல் த்ரிபதி (35 ரன்), சூர்யகுமார் (112) என இருவரின் அதிரடி ஆட்டமும் இந்திய ரசிகர்களை துள்ளி குதிக்க செய்தது. இதையடுத்து கடந்த ஒன்றரை வருடங்களாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமாரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களும் பாராட்டி வருகின்றனர்.
இருட்டிலும் அழகோவியமாய் பளபளக்கும் அனிகா., வாய்க்கு வந்தபடி வர்ணிக்கும் இணையவாசிகள்!!
இந்நிலையில் சூர்யகுமாருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதாவது பேட்டிங்கில் 3 வது வீரராக இறங்கி T20 போட்டிகளில் எதிரணியை சூரியகுமார் கலங்கடித்து வருகிறார். இவரது இந்த பார்மை அப்படியே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அதற்கான வாய்ப்பையும் BCCI வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.