‘முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, அவர் உயிர காப்பாத்தி இருக்கலாம்’ – தவசிக்கு இரங்கல் தெரிவித்த ரோபோ ஷங்கர்!!

0

இந்த வருடம் உலகம் முழுவதும் பல இக்கட்டான நிலையை சந்தித்து வருகிறது. மேலும் தொடர்ந்து பல இழப்புகளையும் சந்தித்து வருகிறோம்.  தற்போது துணை நடிகர் தவசியின் மரணம் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு ரோபோ ஷங்கர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உள்ளார்.

துணை நடிகர் தவசி

தமிழ் திரையுலகில் துணை நடிகராக இருப்பவர் தான் தவசி. இவர் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருப்பார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தான் அவரை வெளியுலகத்திற்கு எடுத்து காட்டியது என்று சொல்லலாம். இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து கொரோனா காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் பல நிதி நெருக்கடிகளும் ஏற்பட்டு வருகிறது. படப்பிடிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளதால் திரையுலகத்தினரையும் இது பாதித்தது என்றே சொல்லலாம். இந்த நிலையில் துணை நடிகர் தவசிக்கு திடீரென உணவு குழாயில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக உடல் மெலிந்து செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

அந்த வீடியோவும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அவரை திருப்பங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் மருத்துவருமான சரவணன் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தார். மேலும் திரையுலகை சேர்ந்த சிவகார்த்திகேயன், சூரி மற்றும் ரோபோ ஷங்கர் அவருக்கு பண உதவிகளை செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அவரின் இறப்பு பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ரோபோ ஷங்கர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, அவரை கடைசியாக நான் தான் பார்த்தேன். அவரை பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. அதன் பிறகு எத்தனை பேர் பார்த்தார்கள் என்று எனக்கு தெரியாது.

நான் அவரிடம் பேசும்போது கூட ‘ஐ எம் பேக்’ என்று தான் கூறினார். முன்னாடியே எல்லாரும் உதவி செய்திருந்தால் இந்நேரம் அவரை காப்பாற்றி இருக்கலாம். என்று கூறி தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here