சிம்புவின் தீவிர ரசிகனான நடிகர் கூல் சுரேஷ் தனது தந்தையை காணவில்லை என்றும் எங்கேயும் பார்த்தால் தகவல் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் கூல் சுரேஷ்:
சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து தற்போது காமெடியில் கலக்கி வருபவர் தான் நடிகர் கூல் சுரேஷ். சமீபத்தில் வெளியான எல்லா படத்திற்கும் தியேட்டருக்கு சென்று விமர்சனம் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நேற்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்கு வீட்டில் இருந்த நகையை விற்று குதிரையில் வந்து பார்த்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் இன்று காலை சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது அந்த வீடியோவில், என்னுடைய அப்பா அதிகாலையில் வாக்கிங் சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை. என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை?.
டிஆர்பி ரேட்டிங்கும் இல்லை, கதையும் இல்லை.., முக்கிய சீரியலை தூக்கி எறிந்த விஜய் டிவி!!
மேலும் தனது அப்பாவின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் பார்த்தீர்கள் என்றால் தயவு செய்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவை அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.