உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ராவின் இடத்தை சரி செய்ய BCCI மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளது.
இந்திய அணி
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விலகினார். இதை தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த அவருக்கு நேற்று ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ரிப்போர்ட்டில் பும்ராவுக்கு எலும்பு முறிவும் எதுவும் ஏற்படவில்லை என்றும், இதனால் அவர் சில வாரங்கள் ஓய்வெடுத்துவிட்டு போட்டியில் பங்கேற்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் தான் உலக கோப்பை தொடரில் பும்ரா கலந்து கொள்வார் என்று BCCI தெரிவித்துள்ளது. மேலும் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாத காரணத்தால் அரையிறுதி, இறுதிப்போட்டியில் மற்றும் களமிறங்குவார் என கூறினர். இதனால் மற்ற லீக் போட்டிகளில் பும்ராவுக்கு பதில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இந்த இடத்தில் தான் BCCI மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளது.
நான் திமிராக நடந்து கொள்ள மாட்டேன்., பும்ரா அளித்த பேட்டியில் வியந்த ரசிகர்கள்., BCCI வெளியிட்ட அறிவிப்பு!!
அதாவது மற்ற போட்டிகளில் பும்ராவுக்கு பதில் பேக் அப் வீரராக உம்ரான் மாலிக்கை களமிறக்க முடிவு செய்துள்ளனர். மேலும் உம்ரான் ஏற்கனவே 150 KM வேகத்தில் பந்து வீச கூடிய திறமைவாய்ந்தவார். இதனால் ஆஸ்திரேலியா போன்ற பெரிய பிட்சுகளில் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என நினைத்து தான் BCCI இந்த முடிவை எடுத்துள்ளனர்.