T20 உலக கோப்பை தொடரில் இந்திய வீரர் பும்ரா பங்கேற்காத நிலையில், அவர் குறித்த முக்கிய தகவலை BCCI வெளியிட்டுள்ளது.
இந்திய அணி
T20 வேர்ல்ட் கப் தொடர் இந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராக உள்ளனர். மேலும் அண்மையில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா முதுகு வலி பிரச்சனையால் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் BCCI பும்ரா உலக கோப்பை தொடரில் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது பும்ராவுக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் லேசான காயம் என்று தான் கூறியுள்ளனர். இதனால் அவர் விளையாடலாம் என மருத்துவர்கள் சொன்னதாக BCCI தெரிவித்துள்ளனர். இதை கேட்ட ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் 3 ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய அணியுடன் பும்ராவும் கிளம்ப உள்ளார். அங்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு பயிற்சியை தொடங்க உள்ளார்.
மேலும் உலக கோப்பை தொடரில் பும்ராவை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மட்டும் விளையாட வைக்க BCCI திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பேட்டி அளித்த பும்ரா, நான் சிறுவயதிலே எனது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை தாண்டி இந்த உயரத்திற்கு வந்துளேன். எனவே நான் எப்போதும் திமிராக நடந்து கொள்ள மாட்டேன் என்றும், உலக கோப்பை தொடரில் கண்டிப்பாக இந்திய அணியை வெற்றி பெறச் செய்வேன் எனவும் கூறியுள்ளார்.