விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில், கல்யாணத்தை நிறுத்த வரும் ராமமூர்த்தியை கோபி அவமானப்படுத்துகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் பல ட்விஸ்டுகள் நடந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பாக்கியா- கோபி விவரத்திற்கு பிறகு, தனது காதலி ராதிகாவை கரம் பிடிக்க தயாராகி விட்டார் கோபி. இதையடுத்து தனது கணவனின் திருமணம் என்று தெரியாமல், அவரின் கல்யாணத்திற்கே சமைக்க ஆர்டர் எடுத்திருக்கிறார் பாக்கியா. இந்நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற விறுவிறுப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகிறது. இன்றைய எபிசோடில், ராமமூர்த்தி தனது மகனின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் மண்டபத்திற்கு வந்து பெரும் பிரச்சனை செய்கிறார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனால் ஆத்திரமடைந்த கோபி, அவரை கீழே தள்ளி விட , பாக்கியா வந்து தாங்கி பிடித்து விட்டு கோபியிடன், அவர் உங்களுடைய அப்பா. உங்க பசங்க உங்க கிட்ட இப்படி நடந்துக்க கூடாதுனு வேண்டிக்கோங்க என்று கூறுகிறார். மேலும் ராமமூர்த்தியை தனியாக அழைத்து சென்று பாக்கியா,” நீங்க எதுக்கு மாமா இங்க வந்தீங்க, நீங்க போய் பேசி எந்த பயனும் இல்ல, எனக்காக நீங்க கஷ்டப்படாதிங்க என்று ராமமூர்த்தியிடம் கூறுகிறார்.
வனிதாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் – 3ம் கணவர் பீட்டர் பாலை பிரிந்த பின் நடந்த கொடூரம்!! ரசிகர்கள் ஷாக்!!
அதற்கு ராமமூர்த்தி, நீ இங்க என்ன பன்ற என்று பாக்கியவிடம் கேட்க இவர்களின் திருமணம் என்று தெரியாது மாமா, நான் இங்க சமையல் ஆர்டர் எடுத்து சமைச்சிட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார். இதையடுத்து பாக்கியாவிடம் மேனேஜர் , ஓனர் வந்திருக்காங்க உங்கள வர சொன்னாங்க என்று கூற, பாக்கியா ஓனரை பார்க்க செல்கிறார். அப்போது, ஓனர் கோபத்துடன் என்னமா நடக்குது இங்க ஒரே பிரச்சனையா இருக்கு, உங்களுக்கு கொடுத்த ஆர்டர் நான் கேன்சல் பண்றேன்னு சொல்ல, பாக்கியா வேண்டாம் சார் இந்த ஆர்டர் எனக்கு ரொம்ப முக்கியம் என்ன நம்பி நிறைய பேர் இருக்காங்க என்று கெஞ்சுகிறார்.
இதை கேட்டு மனம் இறங்கிய ஓனர், சரி இனி எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கோங்க, ஆர்டர் சரியா செஞ்சு முடிங்க என்று சொல்லிவிட்டார். பின் பாக்கியா ராமமூர்த்தியிடம், அவங்க முன்னாடி நான் நல்ல வாழ்ந்து காட்ட வேண்டும் என்றால், எனக்கு இந்த ஆர்டர் ரொம்ப முக்கியம், நான் இதை சரியாக செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.