இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு BCCI தான் காரணம் என பாகிஸ்தான் அணி வீரர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி
T20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான பும்ரா முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் விளையாடுவதற்கு பும்ரா ஒரு சிறந்த வீரராக இருப்பார். ஆனால் அவர் அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் அவருக்கு பதில் மாற்று வீரர் யார் களமிறங்க போகிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ள விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சல்மான், பும்ரா இந்திய அணிக்காக மூன்று வடிவ போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுகிறார். அவருக்கு BCCI தொடர்ந்து அதிக பணி சுமைகளை திணித்து வருகிறது.
இதனால் அவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது என சல்மான் தெரிவித்துள்ளார். மேலும் கார் எப்படி நாம் அதிக முறை யூஸ் பண்ணும் போது ரிப்பேர் ஆகிறதோ, அதே போன்று தான் பும்ராவும் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு காரணம் என கூறியுள்ளார். மேலும் சல்மான் கூறிய இந்த சர்ச்சை கூறிய கருத்துக்கு, இந்திய ரசிகர்களுக்கும் BCCI மீது தான் தவறு என விமர்சித்து வருகின்றனர்.