தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை உடனே தெரிவிப்பதற்காக அந்தந்த மாவட்ட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கோவை மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் ஏற்படும் குடிநீர், போக்குவரத்து பாலங்கள், சாக்கடை அடைப்பு, பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அது குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாரம் தோறும் செவ்வாய் கிழமை குறைதீர்க்கும் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது இவை நடைமுறையில் உள்ள நிலையில் மக்கள் இனி எளிதாக புகார் அளிக்க மற்றொரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இனிவரும் நாட்களில் பொதுமக்கள் தங்களது குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் சுமார் 5 லட்சம் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் தயாரிக்கப்பட்டு அதை வீடு வீடாக ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் குறைகள் இருப்பின் இந்த கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து உடனே தங்களது புகாரை பதிவு செய்யலாம் என கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியுள்ளார்.
இனி வீட்டில் பச்சை கிளி வளர்த்தால்.., அவ்வளவு தான் போங்க.., வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!