தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!!

0

தமிழகத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பயிரிடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் உள் மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த 48 மணிநேரங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி & காரைக்கல் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் எனவும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒரு சில இடஙக்ளில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இனி முதுகு வலிக்கு சொல்லுங்க குட் பாய் – அருமையான டிப்ஸ் இதோ!!

கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் பண்டலூரில் 1 செமீ மழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கரையோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 3.0 – 3.6 மீட்டர் உயரத்தில் அலைகள் எழும்புக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here