இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கெய்ல் சட்டை இல்லாமல் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர்:
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக பெரிய அளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை பாதித்து வருகிறது. இதற்கிடையில் அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி தற்போது 14வது ஐபிஎல் மெகா தொடர் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 179 ரன்களை குவித்தது. அதில் அதிகபட்சமாக ராகுல் 91 மற்றும் கெய்ல் 46 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மேலும் அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்திய ஹர்ப்ரீத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
#MIvsCSK ஐபிஎல் போட்டி – வெற்றி முத்திரையை பதிக்க போவது யார்?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
நேற்று போட்டி முடிந்த பின்பு கெய்ல் மற்றும் சாஹல் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இவர்கள் இருவரும் சட்டை இல்லாமல் தனது உடற்தகுதி வெளியே தெரியும் வகையில் ஓர் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். இதனை மற்றொரு வீரர் சச்சின் பேபி எடுத்துள்ளார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.