சன் டிவியில் சித்தி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் எதுவும் நடைபெறாததகால் தற்போது பழைய காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. சித்தி 2 ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
சித்தி 2
கொரோனாவின் 2வது அலை மிக மோசமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வேலைக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பலரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு பொழுது போக்கே டிவி தான். பல படங்களை பார்த்தாலும் சீரியல்கள் தான் இல்லத்தரசிகளுக்கு மிகவும் ஒரு ஆறுதலாக இருந்தது. இந்நிலையில் இந்த லாக்டவுன் காரணமாக சீரியல்கள் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
லாக்டவுன் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதால் தற்போது சீரியல்களில் காட்சிகள் யாவும் பற்றாக்குறையாக இருப்பதால் பத்தி சீரியல்கள் மீண்டும் பழைய காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் மௌனராகம் சீரியலில் பழைய காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது.
அதே போல சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலும் நிறுத்தப்பட்டு பழைய காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.