பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமடைந்த சித்ராவின் தற்கொலை திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்தை பற்றி பல மர்மமான தகவலும் வெளியாகியுள்ளது. அதனை கேட்ட பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.
சித்ராவின் மரணம்
சின்னத்திரையில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த சித்ராவிற்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம். சித்ரா அக்கா, சித்து என பலரும் உயிரை கொடுக்கும் அளவிற்கு அவர் மேல் அதீத அன்புடன் இருந்து வந்தனர். இந்த சீரியலை பார்ப்பதே சித்ராவுக்காக தான். இந்நிலையில் அவர் இல்லாத பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தற்போது அவர் மரணம் குறித்து அவரது உறவினர்கள் சிலவற்றை கூறியுள்ளனர். மேலும் அவரது தாயும் தன் மகள் தற்கொலை செய்யும் அளவிற்கு கோலை கிடையாது என்றும் கூறி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் சித்ராவின் திருமணம் பற்றி பல பிரச்சனைகள் வந்துள்ளது. அதாவது சித்ரா சினிமாவில் நடிப்பது அவர்களின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை.
இதனால் பல சண்டைகள் நடந்தும் உள்ளது. மேலும் ஹேமந்த் மற்றும் சித்ராவிற்கு 2 மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணமும் நடந்துள்ளது. திருமணம் தேதி குறிக்கும்போதே சித்ராவிற்கு இதில் உடன்பாடு இல்லையாம். நேற்றிரவு கூட திருமணத்தை பற்றி பேச வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சித்ரா இந்த கல்யாணத்தை நிறுத்தும் நோக்கில் தான் இருந்தாராம்.
இவர்களிடம் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில் சித்ரா தூக்கு மாட்டிக்கொண்டது உண்மையா? அல்லது திட்டமிட்ட கொலையா?? என பலரும் சந்தேகித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது முகத்தில் இருந்த காயங்கள் மேலும் பல சந்தேகங்களை கிளப்பி வருகிறது.
சித்துவின் மரணத்திற்கு கண்டிப்பாக நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் என பலரும் குரலெழுப்பி வருகின்றனர். அவரது அம்மாவும் தன் மகள் தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை கிடையாது என்றும் இதனை கண்டிப்பாக விசாரிக்கும் படியும் வழக்கு பதிந்துள்ளார். மேலும் போலீசாரும் விசாரணையை வலுப்படுத்தி வருகின்றனர்.