அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சீன பேராசிரியர்:
உலகளவில் அமெரிக்கா தான் கொரோனவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். சீனாவின் உயிரி ஆயுத தயாரிப்பு ஆராய்ச்சி கூடத்தில் இருந்து அவர்களின் கவனக்குறைவால் தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பிங் லியூ (37) பணியாற்றி வந்தார். சீனாவைச் சேர்ந்த இவர் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு இன்று காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலை, கழுத்து மற்றும் உடல்களில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பேராசிரியரை சுட்டுக் கொன்ற பின்னர் அவர் தனது காரிற்கு ஓடிச் சென்று தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |