இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் மனநிலையை மாற்ற ஐபிஎல் போட்டிகள் தான் ஒரே வழி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தெரிவித்து உள்ளார்.
ஐபிஎல் போட்டிகள்:
இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் சீசன் 13 கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகம் தான் என பலர் கூறி வரும் நிலையில் இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு ஐபிஎல் கோப்பைகள் பெற்றுத் தந்த கேப்டனும், பாஜக., எம்.பி.,யும் ஆன கவுதம் கம்பிர் இது குறித்து தெரிவித்து உள்ளதாவது,
நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் மக்களின் மனஉறுதி குலைந்து போகி உள்ளது. ஒரு அரசியல்வாதியாக மக்களின் உயிர்களை காப்பாற்றுவது தான் முக்கியம் என நான் கூறுவேன். ஆனாலும் மக்களின் இந்த மனநிலையை மாற்ற ஐபிஎல் போட்டிகள் தான் ஒரே வழி என கம்பிர் தெரிவித்து உள்ளார்.
ஐபிஎல் வேண்டும்:
இதற்காக ஐபிஎல் போட்டிகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இதைவிட சிறந்த வழி வேறேதுவும் இல்லை. ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் எந்த அணி வெற்றி பெரும் என்பதை விட ஒட்டுமொத்த இந்தியாவின் உணர்வை மாற்றுவதாக இது இருக்கும். மக்கள் ஐபிஎல் போட்டிகளை பார்க்க தொடங்கி விட்டால் தவறான செயல்கள் குறைந்து விடும். 12 ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளை இது மிகவும் முக்கியம் என கம்பிர் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |