சீனாவில் யானைகள் மது குடித்து விட்டு மட்டையான புகைப்படங்கள் சமூக வலையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
யானைகள் அட்டகாசம்..!
சீனாவில் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு வனப்பகுதியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைகள் கூட்டம் ஒன்று வெளியேறியது. இந்த யானைகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.
மட்டையான யானைகள்..!
யானைகள் அங்கிருந்த ஒரு மது குடோனுக்குள் சென்று அங்கிருந்த மது பாட்டில்களை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டனர். பின்னர் அந்த யானைகள் போதை தலைக்கு அங்கேயே படுத்து உறங்கின. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த செய்தி வெளியான நிலையில் அதை அப்பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். யானைகள் கலைப்பில்தான் உறங்கின. அது மது குடிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |