ஓர் ஆண்டுக்கு பிறகு வூகானில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து வூகான் நகரில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தொற்றின் பரவல் குறைந்த பாடில்லை. இந்த தொற்று வெவ்வேறு நிலைகளில் உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்த அலைகளாக ஏற்பட்டு வருகிறது.
இந்த தொற்று முதலில் வூகானில் உள்ள ஹுவானன் மார்க்கெட்டில் இருந்து பரவத் தொடங்கியது. பின்னர் பல்வேறு நாடுகளுக்கு பரவி தற்போது உலக நாடுகள் இந்த கொரோனா தொற்றால் விழி பிதுங்கி நிற்கின்றன. ஆனால் சீனா பழையபடி தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
தற்போது மீண்டும் உருமாறிய டெல்டா ரக கொரோனா வூகான் நகரில் வேகமாக பரவி வருகிறது. இதனால் சுதாரித்து கொண்ட சீன அரசு கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் வூகான் நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்