தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று உத்தரவு வெளியிட்டு உள்ளார்.
மாநில, மாவட்ட எல்லைகள் மூடல்:
இந்தியாவில் ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையில் அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எந்த விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் 10,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி நாளை மாலை 6 மணிமுதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடுமாறு எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவற்றிக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது. தமிழகத்தில் ஏற்கனவே 9 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது எனவும் அதை மீறினால் காவல் துறை நடவடிக்கை எடுக்கவும் இந்த 144 தடை உத்தரவு வழிவகுக்கும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |