தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை கனகா. இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தனக்கென தனி இடத்தை பிடித்து கொண்டார். அதற்கடுத்து ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த, இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இவரை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விமர்சகர் செய்யாறு பாலு பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது, அவர் பேசியதாவது, நடிகை கனகாவுக்கு தற்போது 49 வயது ஆகும் நிலையில் அவருடைய தாயார் இறந்த பிறகு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். அதன் பிறகு சென்னையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
கல்யாணம் ஆகல.., ஆனா அப்பாவாகணும்.., நடிகர் சல்மான்கானின் சர்ச்சைக்குரிய பேட்டி!!
இதனை தொடர்ந்து நடிகர் ஒருவரின் மகன் ராமச்சந்திரன் அவருக்கு பிஏவாக இருந்து அவரை கவனித்துக் கொள்கிறார். மேலும் படப்பிடிப்புக்கு செல்வது, கதை கேட்பது, சம்பளம் வாங்குவது என அனைத்திலும் அவருக்கு துணையாக இருந்து வந்தார். நாளைடைவில் ராமச்சந்திரனுக்கு கனகா மீது காதல் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட கனகா அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தினார். கொஞ்சம் காலம் கடந்த பிறகு ராமசந்திரன் உயிரிழந்த சம்பவம் அவரை மிகவும் வருத்தத்திற்கு ஆளாக்கியது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட கனகா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.