தென்னிந்திய சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக உருவெடுத்து திரையுலகை கலக்கி வந்தார் மனோபாலா. எக்கசக்க ஹிட் படங்களை கோலிவுட் ரசிகர்களுக்கு கொடுத்து வந்த இவர் படங்களில் நகைச்சுவை கலைஞராக நடித்து வந்தார். இதுபோக சின்னத்திரையில் பல சில நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார்.
இதை தொடர்ந்த ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தை தயாரித்து சிறந்த தயாரிப்பாளருக்கான விருதையும் பெற்றிருந்தார். மேலும் தற்போது இவர் தளபதியின் லியோ படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து அசத்தியிருந்தார். இப்படி சினிமாவில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த இந்த மனிதர், கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தமிழகத்தில் மகளிர் இலவச பேருந்து திட்டம் கிடையாது?? வெளியான அதிர்ச்சி தகவல்!!!
ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது. மேலும் இவரது இறப்பிற்கு திரையுலகினர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இவரது மரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் பாரதிராஜா, நடிகை ராதிகா, சேரன், விஜய் வசந்த், இயக்குனர் தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது உடல் நாளை காலையில் 10. 30 மணியளவில் தகனம் செய்யவுள்ளதாக அவரது மகன் ஹரிஷ் மனோபாலா தெரிவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து தளபதி விஜய்யும் நேரில் சென்று மனோ பாலா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram