பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் சல்மான் கான். இவர் நடிப்பில் திரைக்கு வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இவர் ”கிசி கா பாய் கிசி கி ஜான்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் வசூலில் 100 கோடியை தாண்டியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் ஒரு தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ,என் முதல் காதலி என்னை விட்டு பிரியும் போது நான் அவர் மீது மிகவும் கோபப்பட்டேன். ஆனால் அடுத்தடுத்து நான் காதலித்து வந்த பெண்கள் எல்லாம் என்னை விட்டு போகும் போது தான் என் மீது இருக்கும் தவறை நான் உணர்ந்து கொண்டேன்.
பிரபல நடிகர் மனோ பாலா காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகினர்!!
இதனால் இன்று வரை திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறேன். ஆனால் இப்போது ஒரு குழந்தைக்கு நான் தந்தையாக வேண்டும் என ஆசை எழுந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாத நிலையில் ஒருவர் தந்தையாவது இந்திய சட்டப்படி தவறு என எனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார். இவரின் இந்த வெளிப்படையான பேட்டியால் இணைய வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.