தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வானிலை நிலவரம் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

குமரிக்கடல் முதல் வட கேரளம் வரை வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனீ மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நாளை தமிழகத்தில் உள்ள கோவை, நீலகிரி, தேனீ ஆகிய பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

‘ராஜா ராணி 2’ – ரௌடிகளால் சந்தியாவிற்கு வீட்டில் காத்திருக்கும் பேராபத்து – காப்பாற்றுவாரா சரவணன்!!

அதுமட்டுமல்லாமல் வருகிற 13.03.2021 மற்றும் 14.03.2021 ஆகிய நாட்களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமாக மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடில் 7 செமீ, ராதாபுரம், தூத்துக்குடி, கொட்டாரம் தலா 4 செமீ, நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் நாகர்கோவில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here