‘ராஜா ராணி 2’ – ரௌடிகளால் சந்தியாவிற்கு வீட்டில் காத்திருக்கும் பேராபத்து – காப்பாற்றுவாரா சரவணன்!!

0

மார்க்கெட்டில் ரவுடிகளை மிரட்டும் சந்தியாவிற்கு வீட்டில் மற்றுமொரு பிரச்சனை காத்துக்கொண்டிருக்கிறது. மார்க்கெட்டிற்கு வந்த ரவுடிகள் சிவகாமியின் வீட்டிற்கு வந்து கலவரம் செய்து விட்டு போகிறார்கள்.

‘ராஜா ராணி 2’

இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடில் மார்க்கெட்டில் மாமூல் கேட்டு சண்டையிடும் ரவுடிகளை மிரட்டுகிறார் சந்தியா. போலீசார் வரவும் அங்கிருந்து ரவுடிகள் தப்பித்து விடுகிறார்கள். போலீசார் வந்து கேட்கையில், ரவுடிகளை அடையாளம் காட்ட முடியும் என சந்தியா கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக வீட்டில் லேப்டாப் இருப்பதை தெரிந்து கொள்ளும் சிவகாமி சந்தியாவிடம் கோபப்படுகிறார். பார்வதியும், ஆதியும் லேப்டாப் வீட்டில் இருப்பதை சிவகாமியிடம் சொல்ல வேண்டாம் என சந்தியா கூறியதாக பொய் சொல்லுகிறார்கள். இரண்டு மருமகள்களும் சரி இல்லை என சிவகாமி புலம்பிக்கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டுகார அம்மா, மார்க்கெட்டில் நடந்த விஷயத்தை பற்றி தெளிவாக கூறுகிறார். சந்தியா சும்மாவே இருக்கமாட்டாளா, எதுக்கு தேவையில்லாத வம்பு என வீட்டிலுள்ளோர் புலம்புகின்றனர். சண்டையில் காயமடைந்த பெண்ணுக்கு மருந்து கட்டி விடுகிறார் சந்தியா.

பிறந்தநாளை கொண்டாடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – வைரலாகும் காமன் டிபி!!

அங்கு வரும் சரவணனிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறான் சர்க்கரை. ஏன் இப்படி செஞ்சீங்க என சரவணன் கேட்க, நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் உங்களை மட்டும் தான் சேரனும் என சந்தியா கூற சரவணனும் சப்போர்ட் செய்கிறார். சிவகாமி வீட்டிற்குள் வந்த ரவுடி கும்பல், வீட்டுக்குள் உட்கார்ந்து சாராயம் குடிக்க அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள்.

சரவணன் அப்பா அவர்களை எதிர்த்து கேட்கையில் ரவுடிகள் அவரை அடித்து விடுகிறார்கள். சந்தியா மட்டும் எங்களை அடையாளம் காட்டினால் குடும்பத்தோட தொலைச்சுடுவேன், என ரவுடிகள் மிரட்டி விட்டு செல்கின்றனர். அப்போது வீட்டிற்கு வரும் செந்தில், சரவணன் மற்றும் சந்தியா நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.

எல்லாம் உன்னால தான் நடந்தது, நீ படிச்சவன்னா எப்படின்னாலும் பேசுவியா என சிவகாமி கோவமாக கத்துகிறார். அவசரப்பட்டு சந்தியா இதெல்லாம் பண்ணிட்டாங்க என சரவணன் கூறுகிறார். தயவு செய்து அந்த ரவுடிகளை போலீசிடம் அடையாளம் காட்ட வேண்டாம் என சிவகாமி சந்தியாவிடம் வேண்டுகோள் வைக்கிறார். இத்துடன் இன்றைய தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here