அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்குரிய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

வானிலை நிலவரம்:

வரும் 25.01.2021ம் தேதி முதல் 27.01.2021ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வானம் வறண்ட வானிலையாகவே நிலவும். மேலும் வரும் 29.01.2021 அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவம் – விரட்டியடித்த இந்திய வீரர்கள்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியசும் மற்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியசும் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஓர் பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் கடலுக்கு செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விதிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here