சென்னையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஜி.எஸ்.டி.சாலையை கடக்க இந்த ஹைடெக் ஆன நடைமேம்பாலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நடைமேம்பாலமானது தமிழ்நாடு அரசு திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பில் சுமார் ரூ. 9 கோடி செலவில் லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன் கட்டப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் செல்வதை தவிர்த்து இந்த நடைமேம்பாலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |