தமிழகத்தில் கட்டுமான பணி, தலைவர்கள் வருகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது, அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு பள்ளியில் இருந்து M.R.C. நகர் வரை நாளை (செப்டம்பர் 3) மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதனால் கீழ்காணும் பகுதிகளில் நாளை அதிகாலை 5 மணி முதல் காலை 07.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன் அடிப்படையில்,
- அடையாறு எல்.பி.சாலையில் இருந்து பெசன்ட் நகர் பீச் செல்லும் அனைத்து வாகனங்களும் முத்துலட்சுமி பார்க்கில் திரும்பி சாஸ்திரி நகர் 1வது சாலை வழியாக செல்ல வேண்டும்.
- சாஸ்திரி நகரில் இருந்து முத்துலட்சுமி பார்க் செல்ல 7வது அவென்யூ சந்திப்பிலிருந்து எல்.பி. சாலை வழியாக செல்லலாம்.
- மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலை வழியாக அடையாறு, கிண்டி செல்ல வி.கே.ஐயர் சாலை, சேமியர்ஸ் மற்றும் எஸ்.வி.படேல் சாலை வழியாக செல்லலாம்.
- டி.ஜி.எஸ்.தினகரன் சாலை மற்றும் இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து அடையாறு செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.