சில நாட்களாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை கனமழை:
கடந்த ஒரு சில நாட்களாகவே சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அங்குள்ள ஒரு சிலபகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வாகனங்களில் வேலைக்கு செல்லும் மக்களுக்கு கடும் அவதியை உருவாக்கியது. தாழ்வுப்பகுதியில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் உள்ளே சென்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையில் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியில் ஒரு சில மாற்றங்கள் காரணமாக தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , திருவள்ளுவர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தமிழகம் மட்டும் அல்லாமல் புதுச்சேரி மற்றும் ஆந்திரா கடலோரப்பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.