வழக்கமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த முறை வகுப்புகள் ஆன்லைனில் நடப்பதால், அந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்பில் தான் பாடம் கற்று வருகிறார்கள். இந்நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிக் கல்லூரிகள் திறக்கும் என்று அரசு முடிவெடுத்திருந்தது. தற்போது அந்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போகி உள்ளது. இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வந்தால் பண்டிகைக்கு நிறைய நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால் இப்பொழுது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்று மாணவர்கள் சோகத்தில் இருந்தார்கள். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக ஆன்லைன் வகுப்பிற்கு இன்று (நவம்பர் 12) முதல் நான்கு நாட்களுக்கு தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நவம்பர் 14 ஆம் தேதி அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதால் சில தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கு பரிசு கொடுத்து மாணவர்களை உற்ச்சாகபடுத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.