இனி கண்ணம்மா குழந்தைய பத்தி பேசுனா நான் வீட்ட விட்டு போயிடுவேன் – சௌந்தர்யாவை மிரட்டும் பாரதி!! அனல் பறக்கும் கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவையும், பாரதியையும் பிறந்த நாள் விழாவில் சேர்த்து வைக்கப்போவதாக சௌந்தர்யா கூறியிருந்தார். இவ்வாறு பல சுவாரசியமான பல காட்சிகள் பெற்றனர். இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை நினைத்து அவரின் தந்தை சண்முகத்தின் உடல்நிலை சரியில்லாமல் போகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் பிறந்த நாள் விழாவில் கண்ணம்மாவும், பாரதியும் பார்த்துக் கொள்கின்றனர். மேலும் சௌந்தர்யா தன் பேத்தியை பார்த்து தூக்கி கொஞ்சுகிறார். இதனை பார்த்த பாரதி கோபமடைந்து சௌந்தர்யாவிடம் சொல்லாமல் அங்கிருந்து செல்கிறார். அங்கு வெண்பா, கண்ணம்மா அடித்த ஆத்திரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைக்கிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் பைத்தியம் பிடித்ததை போல டான்ஸ் ஆடுகிறார். அப்பொழுது அங்கு பாரதி வர என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டுள்ளார். மேலும் வெண்பா கண்ணம்மாவை பற்றி பேச ஆத்திரமடைந்து வெண்பாவை அடிக்கிறார். இன்றைய எபிசோடில் வேணு சௌந்தர்யா பிறந்தநாள் விழாவிற்கு சொல்லாமல் போனதை அகிலனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது வேகமாக வீட்டிற்கு வந்து சௌந்தர்யா, பாரதி சொல்லாமல் என்னை விட்டுவிட்டு வந்ததாக கூறி கோவமடைகிறார். அப்பொழுது பாரதி வர அவரும் கோவமடைகிறார். அகிலன் எந்த தைரியத்தில் அம்மாவை விட்டுட்டு வந்த என்று கேட்கிறார். பாரதி தன்னை அம்மா பிளான் பண்ணி தான் அங்கே கூட்டிட்டு போயிருக்கிறார். மேலும் அந்த குழந்தையை பேத்தி என்று கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வேற ஒருத்தனுக்கு பிறந்தது எப்படி உங்களுக்கு பேத்தியாக முடியும் என்று கோவப்படுகிறார். மேலும் இந்த மாதிரி இன்னொரு தடவை நடந்தால் நான் வீட்டை விட்டு போயிடுவேன். ஜென்மத்துக்கும் திரும்ப வர மாட்டேன் என்று மிரட்டுகிறார். அதன் பின் கண்ணம்மாவை நினைத்து சண்முகம் உடல் நிலை சரியில்லாமல் போகிறார்.

மேலும் கண்ணம்மாவை நினைத்து தான் இப்படி இருக்கிறார் என்று அஞ்சலியிடம் கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறுகிறார். அஞ்சலியும் சௌந்தர்யாவிடம் கூற சௌந்தர்யா பாரதியிடம் நடந்ததை கூறி அழைக்க பாரதி வர மறுக்கிறார். அவர் இருந்தா என்ன? செத்தா எனக்கு என்ன? என் வாழ்கை சீரழிஞ்சதுக்கு சண்முகம் தான் முக்கிய காரணம் என்று கத்துகிறார்.

இதனால் சௌந்தர்யா கடுப்பாகி நீ எல்லாம் மனுச ஜென்மமே கிடையாது என்று கூறி சண்முகத்தை பார்க்க செல்கின்றனர். அதன் பின் கண்ணம்மாவை காட்ட கண்ணம்மா குழந்தைக்கு பெயர் வைக்க போவதாக துளசியிடம் கூறுகிறார். துளசியும் சந்தோஷமடைகிறார். மேலும் கண்ணம்மா குழந்தை தான் அத்தையை போல இருப்பதாக கூறி மகிழ்ச்சியடைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here