கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சொல்லப்போனால் வட மாநிலங்களில் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாளை மழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், நாமக்கல், மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.