ஆற்றல் மிக்க தலைவராக மோடிக்கு செராவீக் விருது – குவியும் பாராட்டுக்கள்!!

0

நம் நாட்டின் பிரதமர் மோடி ஆற்றல் மிக்க சிறந்த தலைவர் என்று கூறி அவருக்கு தற்போது செராவீக் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி:

நாட்டின் பிரதமராக மிக சிறப்பாக திகழ்ந்து வருகிறார் மோடி. இவர் கொரோனா காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து உலக நாடுகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்தார். மேலும் கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் பயனடையயும் வகையில் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மேலும் அமெரிக்காவில் செராவீக் எனப்படும் விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும். இந்த விருது ஆற்றல் மற்றும் சுற்றுசூழல் மேம்படுத்துவதில் சிறந்து விளங்கும் தலைவருக்கு வழங்கப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த விருதினை ஆற்றல் மற்றும் சுற்றுசூழல் தொடர்பான மாநாட்டில் வைத்து அறிவிப்பார். தற்போது இந்த ஆண்டிற்கான மாநாடு கடந்த 1ம் தேதி துவங்கியது. மேலும் நேற்று வரை இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் செராவீக் குளோபல் எனர்ஜி அண்ட் என்விரோய்ன்ட்மெண்டல் ஷிப் அவார்ட் எனப்படும் ஆற்றல் மற்றும் சுற்றுசூழல் மேம்படுத்துவதில் சிறந்து விளங்கும் சர்வதேச தலைவராக நம் நாட்டின் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் – ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு!!

மேலும் அவருக்கு விருதை வழங்கி கவுரவித்தனர். விருதை பெற்ற பின் பேசிய மோடி கூறுகையில், பருவ நிலை மாற்றமே உலகிற்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதனை நாம் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் வழியாக தான் எதிர்கொள்ள வேண்டும். மேலும் வருகிற 2030ம் ஆண்டிற்குள் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை இந்திய அடைந்து விடும் என்று உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here