தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்ககளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை ரத்து செய்ய கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தல்:
தமிழகம், கேரளா, புதுவை, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது தேர்தல் நடத்தை விதிமுறையும் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதையும் சமீபத்தில் தான் தேர்தல் தலைமை ஆணையர் அறிவித்தார். இதனையடுத்து இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அரசியல் கட்சிகளும் மிக மும்மரமாக அரசியல் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த ஐந்து மாநிலங்களிலும் நடைபெறவுள்ள தேர்தலை ரத்து செய்யக்கூறி உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது. அதற்கு முன்பே தேர்தலை நடத்தக்கூடாது.
தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ்!!
எனவே ஐந்து மாநிலங்களில் நடைபெறுவதாக அறிவித்த சட்டப்பேரவை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் நாட்டின் பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். எனவே அவர் தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.