டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சரவை கூட்டம்:
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டு வருகிறது. இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சரிசெய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜய் சங்கர் தற்கொலை – பெங்களூருவில் பரபரப்பு..!
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.