அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் உரையாற்றுகிறார்.
மீண்டும் ஊரடங்கு..?
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு தொடரப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பள்ளி,கல்லூரிகள்,வழிபாட்டு தளங்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு..!
கொரோனா பரவலை தடுப்பதற்காக மாவட்ட எல்லைகளை மூடுவது தொடர்பாக ககுறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இதையடுத்து, மண்டலங்களுக்குள் அரசுப் பேருந்துகளை இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மக்களுக்கு மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.