கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இருப்பினும் சில நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அமித் ஷா டிஸ்சார்ஜ்:
டெல்லிக்கு அருகிலுள்ள குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையான மெடந்தாவில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டு இருந்தார். “இன்று எனது கொரோனா வைரஸ் சோதனை அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது. நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், இந்த நேரத்தில் என்னையும் எனது குடும்பத்தினரையும் என்னை நன்றாக வாழ்த்தி ஆசீர்வதித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பேன்” என அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
“கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட எனக்கு உதவிய மற்றும் எனக்கு சிகிச்சையளித்த மெடந்தா மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்று உள்துறை அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
55 வயதான அமித் ஷா, இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் அதற்கு முன் பங்கேற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அனைத்து உயர் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதனால் அமைச்சருடன் தொடர்பு கொண்ட அனைவரும் சுய தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை!!
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மற்றும் கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.