பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை!!

0

இந்திய திரையுலகில் பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் பல திரையுலக பிரபலங்கள் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க வகையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிரபலம் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன். இதனால் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கொரோனா உறுதி செய்யப்பட்ட நாள் அன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட பாலசுப்ரமணியன் தான் நன்றாக இருப்பதாக கூறி இருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் – மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

இருப்பினும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மருத்துவமனை நிர்வாக இயக்குனர் வெளியிட்டு உள்ள அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதில் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் அவர் செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளதாகவும், இதனால் மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த தகவல் அவரது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here