கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிபிஎஸ்இ & ஐசிஎஸ்சி தேர்வுகள்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனை எதிர்த்து தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த மனுவில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வுகளை ரத்து செய்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் செய்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..!
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 3 தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசுகளின் கருத்துக்கள் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், நிலைமை சீரானால் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகளைப் போன்றே ஐசிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.