நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை அரசு வெளியிட்டு உள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன.
சிபிஎஸ்சி தேர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஜூலை மாதம் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்து இருந்தது. அதன்படி இன்று சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வுகள் ஜூலை 1ம் தேதி தொடங்கி 15ம் தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10.30 மணிமுதல் 1.30 வரை நடைபெறும்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் சானிடைசர் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், அவர்களின் உடல்நிலையை பெற்றோர்கள் உறுதி செய்யவும் கோரப்பட்டு உள்ளது. மேலும் தேர்வறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்வது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |