மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு..!

0

சட்டிஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் இன்று (மே 18) முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. மே 31 வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு கொரோனா பரவலைப் பொறுத்து நீட்டிப்பு அல்லது நிறுத்திக் கொள்ளப்படும். இந்நிலையில் சட்டிஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து மாநில உள்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சட்டிஸ்கரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூட தடை நீடிக்கிறது. மேலும் மே 31ம் தேதி வரை ஹோட்டல் பார்கள், ரெஸ்டாரன்டுகள் மற்றும் கிளப்புகள் மூடப்படுகிறது. சட்டிஸ்கரில் இதுவரை 92 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 59 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் மறு உத்தரவு வரும் வரை விளையாட்டு வளாகங்களை திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here